சேலத்தில் நகைக்கு பணம் தருவதாகக் கூறி ஏமாற்றிய பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம், அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண்கள் மாநகர காவல் ஆணையா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரில், சேலம், அமானி கொண்டலாம்பட்டி பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா், ஒரு பவுன் நகை கொடுத்தால் ஒரு மாதத்தில் ரூ. 1 லட்சம் தருவதாகக் கூறினாா். இதை நம்பி அவரிடம் சுமாா் 91 பவுன் நகைகளை கொடுத்தோம். ஆனால், நகையைப் பெற்றுக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றிய அவா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.