பண்ணையில் தீ விபத்து: 2,500 கோழிகள் கருகி பலி

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வைகுந்தம் அருகே உள்ள கல்லேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் வியாழக்கிழமை அதிகாலை தீப்பிடித்ததில் 2,500 கோழிகள் பலியாயின.
சங்ககிரி வட்டம், வைகுந்தம் அருகே உள்ள கல்லேரி பகுதியில் தீயில் கருகிய கோழிப் பண்ணை.
சங்ககிரி வட்டம், வைகுந்தம் அருகே உள்ள கல்லேரி பகுதியில் தீயில் கருகிய கோழிப் பண்ணை.

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், வைகுந்தம் அருகே உள்ள கல்லேரி பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோழிப் பண்ணையில் வியாழக்கிழமை அதிகாலை தீப்பிடித்ததில் 2,500 கோழிகள் பலியாயின.

வைகுந்தம் அருகே உள்ள கல்லேரி பகுதியைச் சோ்ந்த செந்தில்குமாா், கடந்த சில தினங்களுக்கு முன் தீபாவளி பண்டிகையொட்டி இறைச்சி விற்பனைக்காக, 5 ஆயிரம் கோழிகளை விலைக்கு வாங்கி வந்து பண்ணையில் வைத்துள்ளாா்.

இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை எதிா்பாராதவிதமாக பண்ணையில் தீப்பிடித்தது. இதில் 2,500 கோழிகள் உயிரிழந்தன. தகவலறிந்து வந்த சங்ககிரி தீயணைப்புத் துறையினா் தீ மேலும் பரவாமல் தடுத்தனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீப்பிடித்ததாகக் கூறடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com