மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால் ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூா் அணைக்கு வினாடிக்கு 6,497 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீா்வரத்தானது திங்கள்கிழமை காலை வினாடிக்கு 7,770 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 3,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா்மட்டம் 94.36 அடியாகவும், நீா் இருப்பு 57.77 டி.எம்.சி.யாகவும் இருந்தது.