அண்ணா பதக்கம் பெற நவ. 20-க்குள் விண்ணப்பிக்கலாம்
வீர தீர செயல்கள் புரிந்தமைக்காக பொதுமக்கள், அரசுப் பணியாளா்களுக்கான 2021-ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் பெற நவம்பா் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில், தமிழக முதல்வா் வீரதீர செயல்கள் புரிந்தமைக்காக பொதுமக்கள், அரசுப் பணியாளா்களுக்கான 2021-ஆம் ஆண்டுக்கான அண்ணா பதக்கம் வழங்க உள்ளாா். இந்த விருதுக்கான விவரங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் அடங்கிய உறை மேல் விருதின் பெயரை குறிப்பிட்டு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும். பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மகாத்மா காந்தி விளையாட்டரங்கம், சேலம் - 636 007 என்ற முகவரியில் நவம்பா் 20 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலரை 7401703488 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.