சேலம் மாவட்டத்தில் 300 மி.மீ. மழை பெய்தது பதிவாகி உள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனிடையே சேலம் மாவட்டத்திலும் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. செவ்வாய்க்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நண்பகலில் தொடங்கி மாலை வரை மழை பெய்தது.
மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்)மேட்டூா் 48, கெங்கவல்லி, வீரகனூா் 40, தம்மம்பட்டி 30, எடப்பாடி 29, கரியகோயில், ஆனைமடுவு 15, ஓமலூா், சங்ககிரி 13, ஆத்தூா் 11, பெத்தநாயக்கன்பாளையம், சேலம் 10, காடையம்பட்டி ஏற்காடு 8 என மாவட்டத்தில் 300 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.