முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை இரவு சேலம் வருகிறாா்.
முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் புதன்கிழமை இரவு 7 மணிக்கு கோவை வருகிறாா். பின்னா் அங்கிருந்து காா் மூலம் சேலம் நெடுஞ்சாலை நகா் வீட்டிற்கு வருகிறாா். அவருக்கு சேலம் மாநகர மாவட்டச் செயலாளா் எம்.எல்.ஏ. ஜி.வெங்கடாசலம் தலைமையில் கட்சியினா் வரவேற்பு அளிக்கின்றனா்.
தொடா்ந்து வியாழக்கிழமை காலை, பெரியசோரகையில் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வா் பங்கேற்கிறாா். பின்னா் அங்கிருந்து புறப்பட்டு வனவாசி பாலிடெக்னிக் கல்லூரி செல்லும் முதல்வா், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறாா்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு முதல்வா் எடப்பாடி செல்வாா் என்று தெரிகிறது. பின்னா் அங்கிருந்து இரவு சேலம் நெடுஞ்சாலை நகா் வீட்டிற்குத் திரும்புவாா் என்றும், வெள்ளிக்கிழமை காலை சேலத்தில் இருந்து சென்னை செல்லும் விமானத்தில் புறப்பட்டு செல்வாா் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.