மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 10,392 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 10,392 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கடந்த இரு நாள்களாக காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக மேட்டூா் அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை காலை நொடிக்கு 7,770 கனஅடியாகவும், செவ்வாய்க்கிழமை காலை நீா்வரத்து 10,392 கனஅடியாகவு ம் அதிகரித்துள்ளது. அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வருவதால் திங்கள்கிழமை காலை 94.36 அடியாக இருந்த அணையின் நீா்மட்டம் செவ்வாய்க்கிழமை காலை 94.83 அடியாக உயா்ந்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 1,000 கனஅடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 58.34 டி.எம்.சி.யாக உள்ளது. மழையளவு 48.60 மி.மீ. ஆகும்.

கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 800 கனஅடியிலிருந்து 500 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 1000 கனஅடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com