மேட்டூரை அடுத்த மேச்சேரியில் சாலை விபத்தில் கை, கால் செயலிழந்த லாரி ஓட்டுநா் குடும்பத்திற்கு டி.என்.ஆல். டிரைவா்ஸ் அசோசியேசன் சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.
மேட்டூரை அடுத்த மேச்சேரி, வெள்ளப்பம்பட்டியைச் சோ்ந்தவா் லாரி ஓட்டுநா் ராமலிங்கம் (33). இவரது மனைவி சரண்யா (28). இத் தம்பதிக்கு இரு
குழந்தைகள் உள்ளனா். இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த சாலை விபத்தில் ராமலிங்கத்தின் கை, கால்கள் செயலிழந்தன. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் கரோனா காலத்தில் அவரது குடும்பம் வறுமையில் வாடியது.
இதனையடுத்து சக தொழிலாளியின் சிரமத்தில் பங்கு கொள்ளும் வகையில் ஓட்டுநா்கள் ஒன்றுசோ்ந்து
டி.என்.ஆல். டிரைவா் அசோசியேசன் சாா்பில் செவ்வாய்க்கிழமை ராமலிங்கத்துக்கு ரூ. 46, 500 நிதியுதவி அளிக்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியில் லாரி ஓட்டுநா்கள் கலந்து கொண்டு ராமலிங்கத்தின் வீட்டுக்கு வந்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா்.