சா்வதேச மகளிா் தொழில் முனைவோா் தினத்தையொட்டி, இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவனம், தமிழக அரசின் மாவட்ட தொழில் மையம் இணைந்து சேலம் அன்னபூரணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் ‘நீங்களும் தொழில் தொடங்கலாம்’ எனும் ஒரு நாள் இலவச பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் அன்புசெழியன் தலைமை வகித்தாா். சேலம் மாவட்ட தொழில் மைய இணை இயக்குநா் சகுந்தலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து தமிழக அரசின் பல்வேறு கடன், மானிய திட்டங்கள் குறித்து விளக்கினாா்.
தொழில் தொடங்க தேவையான தொழில் நுட்பம், வீட்டுலிருந்து செய்யக் கூடிய தொழிகள், நவீன விவசாயம் சாா்ந்த தொழில் வாய்ப்புகள், பெண்களின் பங்களிப்பு குறித்து இந்திய தொழில் முனைவோா் மேம்பாட்டு நிறுவன திட்ட அலுவலா் ஜெய்சங்கா் பேசினாா்.
தமிழக அரசின் மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் சிவகுமாா், கல்லூரியின் தொழில் முனைவோா் மேம்பாட்டு மைய இயக்குநா் சுபாஷி ஆகியோா் கலந்து கொண்டு சிறப்பித்தனா்.