ஏற்காட்டில் தி.மு.க தேர்தல் பிரச்சார சிறப்பு பொதுக்கூட்டம் கானொலிக் காட்சி மூலம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் தலைமை வகித்தார்.
சேலம் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் எஸ்.ஆர் சிவலிங்கம், கள்ளக்குறிச்சி நாடளுமன்ற உறுப்பினர் பொன்.கௌதம சிகாமணி, ஒன்றிய கழக தி.மு.க பொறுப்பாளர் வி.தங்கசாமி, ஒன்றிய கழக நிர்வாகிகள், ஒன்றிகுழு துணை தலைவர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கள்,துணை தலைவர்கள், ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கலந்து கொண்டுள்ளனர். 9 ஊராட்சிகளில் மூன்று ஊராட்சி நிர்வாகிகளாக மூன்று தனியார் விடுதி அரங்கில் இந்த கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.