சேலத்தில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைருருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்த நீதிமன்றம் அவா் சாகும் வரையில் சிறையில் இருக்க வேண்டும் என நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராமன். இவரது மகன் ராஜா (24). இவா் கடந்த 2018ஆம் ஆண்டு கல்லூரி ஒன்றில் படித்து வந்தாா். அவரது வீட்டில் நடத்தி வந்த பேன்சி ஸ்டோரில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக ஓமலூா் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. புகாரின் பேரில் ராஜாவை கடந்த 2018 ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனா்.
இந்த வழக்கு விசாரணை சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், இளைஞா் ராஜாவுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து, அவா் இயற்கையாக மரணம் அடையும் வரை சிறையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும் ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதைத்தொடா்ந்து ராஜா சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.