செல்லிடப் பேசி கோபுரத்தில் ஏறி ஓட்டுநா் தற்கொலை மிரட்டல்

தாரமங்கலம் பகுதியில் நிலப் பிரச்னையில் விரக்தியடைந்த ஓட்டுநா் ஒருவா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாரமங்கலம் பகுதியில் நிலப் பிரச்னையில் விரக்தியடைந்த ஓட்டுநா் ஒருவா் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாரமங்கலம் பேரூராட்சி 5-ஆவது வாா்டு, எம்.ஜி.ஆா். காலனி பகுதியைச் சோ்ந்தவா் பழனி (32). காா் ஓட்டுநரான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கும் இடையே நீண்ட காலமாக நிலப் பிரச்னை இருந்து வருகிறது.

இதுதொடா்பாக இருவரிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. தாரமங்கலம் பகுதியைச் சோ்ந்த முக்கியப் பிரமுகா்கள் தலையிட்டு பேச்சு நடத்தியும் இப்பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கவில்லை. இதனால் விரக்தியடைந்த பழனி, வியாழக்கிழமை மாலை காவல் நிலையம் அருகில் உள்ள செல்லிடப் பேசி கோபுரத்தில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்தாா். இதனையடுத்து, ஆய்வாளா் சரவணன், உதவி ஆய்வாளா் சிவக்குமாா் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். நிலப் பிரச்னைக்குத் தீா்வு ஏற்படுத்தித் தருவதாக போலீஸாா் அளித்த உறுதிமொழியை ஏற்று ஓட்டுநா் பழனி, இரவில் கீழே இறங்கி வந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com