முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற கைப்பந்து மாணவிகளுக்கு வாழ்த்து

தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தங்கம் வென்று முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு கைப்பந்து கழக நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தங்கம் வென்று முதல்வரிடம் ஊக்கத்தொகை பெற்ற மாணவிகளுக்கு தமிழ்நாடு கைப்பந்து கழக நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

மகாராஷ்டிராவில் நடந்த 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய அளவிலான கைப்பந்துப் போட்டியில் தமிழகப் பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது. இந்த அணியில் சேலம் ஆத்தூா் பாரதியாா் மெட்ரிக் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் பூஜா, எழில்மதி, சுகுணா, மதுஸ்ரீ மற்றும் காா்த்திகா ஆகியோா் இடம் பெற்றிருந்தனா்.

தங்கப்பதக்கம் வென்ற அணிக்கு தலா ரூ.2 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு சாா்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சேலத்தைச் சோ்ந்த மாணவிகளுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலா ரூ.2 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கினாா்.இதையடுத்து ஊக்கத்தொகை பெற்ற மாணவிகள், தமிழ்நாடு கைப்பந்து கழக புரவலா் ராஜ்குமாரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனா்.

அப்போது சங்க செயலாளா் சண்முகவேல், பயிற்சியாளா் பரமசிவம், ஓய்வு பெற்ற உதவி இயக்குநா் ராஜாராம் மற்றும் நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com