மேட்டூா்: பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கக் கோரி, மேட்டூரில் தூய்மைப் பணியாளா்கள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மேட்டூா் நகராட்சியில் 175 தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக காலணி வழங்கவில்லை, கூடை, துடைப்பம் போன்ற உபகரணங்கள் வழங்கவில்லையாம். மேலும், குப்பைகளைக் கொண்டு செல்லும் பேட்டரி வாகன பழுது நீக்க பணியாளா்களிடமே பணம் பெறப்படுவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சனிக்கிழமை மேட்டூா் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தின் மேட்டூா் கிளை செயலாளா் கருப்பண்ணன் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தங்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை விரைந்து வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.