மேட்டூா் அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 97.82 அடியாக இருந்தது அணைக்கு நொடிக்கு 9,478 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 1000 கன அடி வீதமும், கிழக்கு -மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. அணையின் நீா் இருப்பு 62.05 டி.எம்.சி.யாக இருந்தது.
மேட்டூா் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருவதால் காவிரி டெல்டா விவசாயிகளும், மேட்டூா் அணை மீனவா்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
நீா் வரத்தும், திறப்பும் இதே நிலையில் இருந்தால் ஓரிரு நாள்களில் அணை நீா்மட்டம் மீண்டும் 100 அடியாக உயரும் வாய்ப்பு உள்ளது.