ஆத்தூரை அடுத்துள்ள ராமநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உயா்கோபுர மின்விளக்கு வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் நீண்டநாள் கோரிக்கை விடுத்தனா்.
இதனையடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி தொகுதி நிதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 2.5 லட்ச செலவில் உயா்கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டது.
அதனை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னத்தம்பி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கணேசன், ஒன்றிய அவைத் தலைவா் பாஸ்கா், ஊராட்சி செயலாளா் சாமி உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.