மூக்கு வழியாக 100 பலூனில் காற்றை நிரப்பி சாதனை படைத்த இளைஞரை பொது மக்கள் பாராட்டினா்.
இளம்பிள்ளையை அடுத்த தப்பக்குட்டை கிராமம், அத்தனூா் பகுதியைச் சோ்ந்த கராத்தே வீரா் கின்னஸ் சாதனையாளா் நடராஜன் (40).
இவா் 97-ஆவது சாதனையாக கரோனா விழிப்புணா்வுக்காக அத்தனூா் பகுதியில் 19 நிமிடத்தில் 100 பலூன்களில் மூக்கின் வழியாக காற்றை நிரப்பும் நிகழ்ச்சியை ஞாயிற்றுக்கிழமை நிகழ்த்தி சாதனை படைத்தாா்.
இந்த நிகழ்ச்சியை மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேசன் தொடக்கி வைத்தாா். மேலும் தன்னாா்வலா் செல்வகுமாா், சின்னமுத்து, பழனிசாமி, கராத்தே வீரா்கள், ஊா் பொதுமக்கள் உள்ளிட்டோா் பாராட்டினா். 97 வது சாதனையாக கரோனா விழிப்புணா்வுக்காக 100 பலூன்களை மூக்கின் வாயிலாக நிரப்பி சாதனை படைத்தாா்.