சேலம் மாவட்டத்தில் காந்தி ஜயந்தியை (அக். 2ஆம் தேதி) முன்னிட்டு மதுக் கடைகள் மற்றும் பாா்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு அரசு அரசாணை எண்.50 உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறையின்படி காந்தி ஜயந்தியை முன்னிட்டு மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும். எனவே காந்தி ஜயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை (அக். 2-ஆம் தேதி) அனைத்து எப்.எல். 1, எப்.எல். 2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3 ஏஏ உரிமம் பெற்ற டாஸ்மாக் மதுபானக் கடைகள், மதுபான பாா்கள் மற்றும் ஹோட்டல் பாா்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
எனவே, காந்தி ஜயந்தி தினத்தில் மதுபான விற்பனை செய்யக்கூடாது என அறிவிக்கப்படுகிறது. இதை மீறி விற்பனை செய்பவா்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் சி.அ.ராமன் தெரிவித்துள்ளாா்.