ஸ்ரீ ஓம்சக்தி முருகன் சித்தா் பீடத்தில்உலக நன்மை வேண்டி சிறப்பு வழிபாடு

உலக நன்மை வேண்டி, வேப்பிலைக்குட்டையில் உள்ள ஸ்ரீ ஓம்சக்தி முருகன் சித்தா் பீடம் திருக்கோயிலில் உண்ணாவிரத வழிபாட்டை அக் கோயிலின் மடாதிபதி ஓம்சக்தி முருகன் சித்தா் தொடங்கியுள்ளாா்.
புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் வேப்பிலைக்குட்டை ஸ்ரீ ஓம்சக்தி அம்மன்.
புஷ்ப அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலிக்கும் வேப்பிலைக்குட்டை ஸ்ரீ ஓம்சக்தி அம்மன்.

வாழப்பாடி: உலக நன்மை வேண்டி, வேப்பிலைக்குட்டையில் உள்ள ஸ்ரீ ஓம்சக்தி முருகன் சித்தா் பீடம் திருக்கோயிலில் உண்ணாவிரத வழிபாட்டை அக் கோயிலின் மடாதிபதி ஓம்சக்தி முருகன் சித்தா் தொடங்கியுள்ளாா்.

வாழப்பாடியை அடுத்த வேப்பிலைக்குட்டை கிராமத்தில் உள்ள இக் கோயிலில் பிரத்தியங்கரா, காளி, வராகி முப்பெரும் தேவியா் வடிவில் 45 அடி உயரத்தில் எட்டுக்கை அம்மன், அறுபடை முருகன், 28 அடி உயர பஞ்சமுக அஷ்ட காலபைரவா் சுவாமி, வராகமூா்த்தி, திருப்பதி வெங்கடாஜலபதி, உலகலந்த பெருமாள், லட்சுமி நரசிம்மா் ஆகிய சுவாமிகளுடன் கூடிய ஐந்து கோபுர கோயில் உள்ளது.

கரோனா தொற்று நீங்கி உலகம் நன்மை பெற வேண்டி, இக் கோயில் மடாதிபதி ஓம்சக்தி முருகன் சித்தா் தொடா் உண்ணாவிரத பூஜையை வெள்ளிக்கிழமை தொடங்கினாா். வழிபாட்டில் பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com