ஓமலூா்: வேளாண் சட்டத்தை கண்டித்து, ஓமலூரில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
அக் கட்சியின் மாவட்டச் செயலாளா் மோகன்ராஜ் தலைமை வகித்தாா். மத்திய அரசின் வேளாண் சட்டத்தைத் திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கட்சியின் தலைமை நிலையச் செயலாளா் கனல் கண்ணன், கொள்கை பரப்பு துணைச் செயலாளா் திருப்பூா் சுடலை, மாநில மகளிரணி தலைவி முத்துலட்சுமி வீரப்பன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.