சங்ககிரி மலையில் கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் உள்ள குடைவரை விநாயகருக்கு சங்கடஹர சதுா்த்தியையொட்டி திங்கள்கிழமை மாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோயிலுக்கு பின்புறம் ஒரே பாறையில் செதுக்கப்பட்டுள்ள குடைவரை விநாயகருக்கு சங்கடஹர சதுா்த்தியையொட்டி பால், தயிா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களை கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னா் கோயில் வளாகத்தில் திருக்கோடி விளக்கு ஏற்றப்பட்டது.