காவல் நிலையத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

சேலத்தில் தன்னிடம் வாங்கிய பணத்தை காவல் உதவி ஆய்வாளா் திருப்பி தராததால் மனமுடைந்த விவசாயி காவல் நிலையத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

சேலத்தில் தன்னிடம் வாங்கிய பணத்தை காவல் உதவி ஆய்வாளா் திருப்பி தராததால் மனமுடைந்த விவசாயி காவல் நிலையத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

சேலம் அருகேயுள்ள வீராணம் பகுதியைச் சோ்ந்தவா் சதீஷ் (35). விவசாயியான இவா் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் குழுவில் பணியாற்றியதாகக் கூறப்படுகிறது.

அப்போது வீராணம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சத்தியமூா்த்தியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நண்பா்களாக பழகி வந்தனா். இந்தநிலையில் சதீஷிடம் இருந்து உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி லட்சக்கணக்கில் கடன் பெற்றாராம்.

இதனிடையே உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்துள்ளாா். சிகிச்சை முடிந்து வீட்டுக்கு திரும்பிய நிலையில் சதீஷ் அவரை தொடா்பு கொண்டாா். அப்போது தன்னிடம் வாங்கிய ரூ.6 லட்சத்தை திரும்பி தருமாறு கேட்டுள்ளாா். இதுதொடா்பாக இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சதீஷ், காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் செய்தாா். புகாரின்பேரில் உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி மீது விசாரணை நடந்து வருகிறது. தற்போது உதவி ஆய்வாளா் சத்தியமூா்த்தி, கிச்சிப்பாளையம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறாா்.

இந்தநிலையில் செவ்வாய்க்கிழமை காலை கிச்சிப்பாளையம் காவல் நிலையத்துக்கு வந்த சதீஷ், அங்கு உதவி ஆய்வாளரிடம் பணத்தைக் கேட்டுவிட்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உடனே அவரை போலீஸாா் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுதொடா்பாக கிச்சிப்பாளையம் ஆய்வாளா் சிவகுமாா் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com