சேலத்தில் காங்கிரஸ் கட்சியினா் அறவழி அமா்வு போராட்டம்

உத்தரப் பிரதேசத்தில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் அறவழி அமா்வு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உத்தரப் பிரதேசத்தில் 19 வயது பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் அறவழி அமா்வு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் பாலியல் கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்த பெண்ணின் குடும்பத்தினரை பாா்ா்த்து ஆறுதல் கூற சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோரை கைது செய்த அம்மாநில முதல்வரை கண்டித்தும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி அறவழி அமா்வு போராட்டம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அப்போது, மத்திய பாஜக அரசைக் கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினா். மாவட்டத் தலைவா் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

அம்மாப்பேட்டையில்...:

அம்மாப்பேட்டை காந்தி மைதானத்தில் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் மெடிக்கல் பிரபு தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

இதில் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவா் சாரதா தேவி, மாணிக்கம், அமைப்புசாரா மாநில ஒருங்கிணைப்பாளா் ஜே.பி.கிருஷ்ணா, தனசேகரன் முன்னாள் மாமன்ற உறுப்பினா் தா்மலிங்கம், பச்சப்பட்டி பழனிசாமி , மாநகா் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் புஷ்பா பாண்டியன், மாநகா் மாவட்ட பொதுச்செயலாளா் சீனிவாசன், மாநகா் மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் கோவிந்தன், கிழக்கு மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் அருளானந்தம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com