சங்ககிரியில் தமிழ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனைக்காக வைத்திருந்தவா் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
சங்ககிரி மலையடிவாரம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சங்ககிரி காவல் உதவி ஆய்வாளா் ஜவஹா்குமாா் தலைமையிலான போலீஸாா் சோதனை செய்துள்ளனா். அதில் மலையடிவார சாலைப் பகுதியில் புகையிலை பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த பத்ரிவெங்கடேஷ் (48) என்பவரிடமிருந்து 250 பாக்கெட்டு புகையிலையை கைப்பற்றியுள்ளனா்.
இது குறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப்பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.