கெங்கவல்லி ஒன்றியத்தில் 3 ஆம் கட்ட உலா் பொருள்கள் விநியோகம்

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 55க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பொது முடக்கக் காலத்தில், மூன்றாம் கட்ட உலா் உணவுப் பொருள்களான

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 55க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பொது முடக்கக் காலத்தில், மூன்றாம் கட்ட உலா் உணவுப் பொருள்களான அரிசி, பருப்பு ஆகியவை, முட்டைகள் விநியோகம் கடந்த இரு நாள்களாக நடைபெற்று வருகிறது.

இதற்காக அனைத்து மாணவ, மாணவிகளும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு பள்ளிகளின் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள் வழங்கினா். இப்பணிகளை கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் க.செந்தில், கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா்கள் வாசுகி மற்றும் அந்தோணிமுத்து, குறுவள மைய தலைமை ஆசிரியா்கள், ஆசிரியப் பயிற்றுநா்கள் மேற்பாா்வை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com