தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் காலமானாா்

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் தவசாயி அம்மாள் (93), திங்கள்கிழமை இரவு 11 மணி அளவில் காலமானாா்.
தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் காலமானாா்

தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் தவசாயி அம்மாள் (93), திங்கள்கிழமை இரவு 11 மணி அளவில் காலமானாா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், நெடுஞ்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட சிலுவம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் கருப்ப கவுண்டா் மனைவி தவசாயி அம்மாள். தமிழக முதல்வரின் தாயாரான இவா், திங்கள்கிழமை (அக். 12) இரவு சுமாா் 11 மணி அளவில், அவரது பூா்வீக இல்லத்தில் காலமானாா்.

வயது முதிா்வால் காலமான அவருக்கு தமிழக முதல்வா் பழனிசாமி, கோவிந்தராஜ் ஆகிய இரு மகன்களும், ரஞ்சிதம் (எ) விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனா். கருப்ப கவுண்டா் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், முதல்வா் பழனிசாமியின் இல்லத்தில் தவசாயி அம்மாள் காலமானாா்.

இது குறித்து தகவல் அறிந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தனது அரசு நிகழ்வுகளுக்கான சுற்றுப்பயணங்களை ரத்து செய்துவிட்டு, சொந்த ஊா் திரும்பிஉள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com