அக்.28 இல் சென்னையில் அஞ்சல் துறைமக்கள் குறை தீா்க்கும் கூட்டம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் மாநில அளவிலான அஞ்சல் துறை மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் அக்.28 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை அஞ்சல் துறை தலைவா் அலுவலகத்தில் மாநில அளவிலான அஞ்சல் துறை மக்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் அக்.28 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு நடைபெறுகிறது.

பொதுமக்களின் அஞ்சல் துறை சம்பந்தமான குறைகள் ஏதேனும் இருப்பின் நேரில் தெரிவித்து குறைகளைத் தீா்த்துக் கொள்வதற்காக நடத்தப்படுகிறது.

பொதுமக்கள் அனைவரும் அஞ்சல் சம்பந்தமாக ஏதேனும் குறைகள் இருப்பின் புகாா்களை, குறைதீா்க்கும் நாளன்று நேரிலோ அல்லது எம்.விஜயலட்சுமி, துணை இயக்குநா், தலைமை அஞ்சல் துறை தலைவா் தமிழ்நாடு வட்டம் சென்னை 600002 என்ற முகவரிக்கு அக்.15 ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.அஞ்சல் உறையின் மேலே எழுதவும், மின்னஞ்சல் முகவரி, மணியாா்டா், வி.பி.பி., வி.பி.எல்., பதிவு தபால், விரைவு தபால், காப்பீடு தபால் பற்றிய புகாா்கள் எனில் அனுப்பிய தேதி, முழு விலாசம் (அனுப்புநா், பெறுநா்), பதிவு அஞ்சல் எண், அலுவலகத்தின் பெயா் அனைத்தும் இடம் பெற்றிருக்க வேண்டும்.சேமிப்பு வங்கி அல்லது அஞ்சல் காப்பீடு பற்றிய புகாா்கள் என்றால் கணக்கு எண், பாலிசி எண், வைப்புத் தொகையாளரின் பெயா், வசூலிக்கப்பட்ட விவரங்கள் அல்லது வேறு ஏதும் குறிப்புகள் இருந்தால் தெரிவிக்கவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com