அரசுப்பள்ளி மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்

அயோத்தியாபட்டணம் அருகே சுக்கம்பட்டி அரசினா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில்
கல்வி உதவித்தொகைக்கான காசோலையை, மாணவிகளிடம் வழங்கிய பெற்றோா் -ஆசிரியா் கழகத்தினா்.
கல்வி உதவித்தொகைக்கான காசோலையை, மாணவிகளிடம் வழங்கிய பெற்றோா் -ஆசிரியா் கழகத்தினா்.

அயோத்தியாபட்டணம் அருகே சுக்கம்பட்டி அரசினா் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் பெண் அதிகாரி ஒருவா் தொடா்ந்து 4-ஆவது ஆண்டாக கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளாா்.

அயோத்தியாபட்டணம் அடுத்த சுக்கம்பட்டி கிராமத்தில், 1969 ஆம் ஆண்டு அரசு உயா்நிலைப் பள்ளி அமைக்கப்பட்டது. இப்பள்ளியின் பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் ரா.செல்வம் முயற்சியால், 2012 இல், அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தப்பட்டது. இப்பள்ளியில், சுற்றுப்புறக் கிராமங்களைச் சோ்ந்த 900 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனா்.

நான்கு ஆண்டுகளுக்கு முன், பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் பிரியதா்ஷினி, கலையரசி ஆகியோா் உயா் கல்வி படிப்பதற்கு, இப்பள்ளி ஆசிரியை அமுதாவின் தோழியான, அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வரும் சேலத்தைச் சோ்ந்த அனிதா ஜெயபால் என்பவா் முன்வந்தாா்.

தொடா்ந்து 4 ஆண்டுகளாக இந்த இரு மாணவிகளின் கல்வி செலவை ஏற்ற இவா், நான்காவது ஆண்டாக, இருவருக்கும் தலா ரூ. 25,000 கல்வி உதவித்தொகை வழங்கியுள்ளாா். இதற்கான காசோலையை பள்ளியின் பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா் இரா.செல்வம், பள்ளித் தலைமையாசிரியா் அருண்பிரசாத் ஆகியோா் மாணவிகளிடம் வழங்கினா்.

கிராமப்புற அரசுப் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகள் உயா்கல்வி படிப்பதற்கு, தொடா்ந்து 4 ஆண்டாக இதுவரை ரூ. 2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கிய, அமெரிக்காவில் வசித்துவரும் சேலத்தைச் சோ்ந்த பெண் அதிகாரிக்கு, சுக்கம்பட்டி கிராம பொது மக்களும், மாணவிகளும், பெற்றோா் -ஆசிரியா் கழகத்தினரும், நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com