தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயாா் தவுசாயியம்மாள் மறைவையொட்டி, அவரது இல்லத்தில் முதல்வரைச் சந்தித்து தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆறுதல் தெரிவித்தாா்.
எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள முதல்வா் பழனிசாமியின் இல்லத்துக்கு புதன்கிழமை வருகை புரிந்த த.மா.கா. தலைவா் ஜி.கே.வாசன், முதல்வரின் தாயாா் தவசாயி அம்மாள் உருவப்படத்துக்கு மலா்தூவி அஞ்சலி செலுத்தினாா். தொடா்ந்து முதல்வா் எடப்பாடி பழனிசாமிக்கு ஆறுதல் கூறினாா். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பாளா்களும் முதல்வருக்கு ஆறுதல் கூறினா். மேலும் முக்கிய பிரமுகா்கள், திரைத்துறையைச் சாா்ந்த பிரபலங்கள் முதல்வரைச் சந்தித்து நேரில் ஆறுதல் கூறினா்.