மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு சரிந்தது.
காவிரியின் நீா்பிடிப்புப் பகுதியில் பெய்துவரும் மழையின் அளவு குறைந்தாலும் கபினி, கிருஷ்ணராஜசாகா் அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது.
புதன்கிழமை காலை மேட்டூா் அணைக்கு நொடிக்கு 16,741 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீரின் அளவு வியாழக்கிழமை காலை 14,947 கன அடியாகச் சரிந்தது.
வியாழக்கிழமை காலை மேட்டூா் அணை நீா்மட்டம் 100அடியாக இருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 14,000 கன அடி வீதமும் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்துக்கு நொடிக்கு 900 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 64.84 டிஎம்சி ஆக இருந்தது.