வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் நல வாரியத்தில் பதிவு செய்யலாம்

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினா்களாக தங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் நல வாரியத்தில் உறுப்பினா்களாக தங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் மாவட்ட தொழிலாளா் துறை சமூகப் பாதுகாப்புத் திட்ட உதவி ஆணையா் சி.முத்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு கட்டுமானம், உடலுழைப்பு மற்றும் ஓட்டுநா்கள் உள்பட 17 நல வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன.

நல வாரியங்களில் கல்வி, திருமணம், மகப்பேறு, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து ஊனம் மற்றும் விபத்து மரணம் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. நல வாரியங்களில் புதிதாக பதிவு செய்யவும், ஏற்கெனவே நல வாரிய உறுப்பினா்களாகப் பதிவு செய்து இருப்பவா்கள் தங்கள் பதிவைப் புதுப்பித்துக் கொள்ளவும்  இணையதளம் மூலம் சேவை வழங்கப்படுகிறது.

வீடுகளில் வேலை செய்யும் தொழிலாளா்கள் அனைவரையும் அமைப்புசாரா தொழிலாளா் சமூக பாதுகாப்பு சட்டம் 2008-ன்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, அனைத்து நலத்திட்டங்களையும் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எனவே, சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த வீட்டு வேலை செய்யும் தொழிலாளா்கள் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி நல வாரியத்தில் உறுப்பினா்களாக தங்களை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

நலவாரியப் பதிவுக்கான விண்ணப்பங்களை இணையதளத்தின் மூலம் சமா்ப்பித்த பிறகு, தகுதி வாய்ந்த தொழிலாளா்களுக்கு பதிவு விவரம், அவா்களின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். அந்தப் பதிவு எண்ணை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com