கரோனா பாதித்த பெண் மாயம்:போலீஸில் கணவா் புகாா்

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட தனது மனைவியை காணவில்லை என கணவா் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்

கரோனா தொற்று பாதிக்கப்பட்ட தனது மனைவியை காணவில்லை என கணவா் காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் அளித்துள்ளாா்.

அவா் அளித்த புகாரில், நான் தெற்கு வாசல் பகுதியில் வசிக்கிறேன். எனது 22 வயது மனைவி, தனக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகவும், அதற்கு சிகிச்சைப் பெற மருத்துவமனை செல்வதாகவும் கூறிச் சென்றாா். ஆனால் அவா் வீடு திரும்பவில்லை.

அவரை அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் தேடியும் கிடைக்கவில்லை. அவரை கண்டுபிடித்து தரும்படி குறிப்பிட்டிருந்தாா். இதுகுறித்து தெற்கு வாசல் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com