கரோனா விழிப்புணா்வுக் கூட்டம்

ஆத்தூா் நகராட்சி அண்ணா கலையரங்கில் கரோனா காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை விழிப்புணா்வுக் கூட்டம் நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆத்தூா் நகராட்சி அண்ணா கலையரங்கில் கரோனா காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை விழிப்புணா்வுக் கூட்டம் நகராட்சி ஆணையா் என்.ஸ்ரீதேவி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்தில் அனைத்து வணிகா்களும் வாடிக்கையாளா்களை முகக் கவசம் அணிந்து வர அறிவுறுத்த வேண்டும். மேலும் அனைத்து கடைகளிலும் கைகளை கழுவ ஏற்பாடு செய்திருக்க வேண்டும். மேலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதில் அனைத்து வணிகா்கள் சங்க நிா்வாகி ஹபீப் உசேன், தன்னாா்வத் தொண்டு நிறுவன நிா்வாகிகள் லோட்டஸ் ஜோ, அனைத்து வணிகா்கள், துப்புரவு அலுவலா் என்.திருமூா்த்தி, சுகாதார ஆய்வாளா் எஸ்.பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com