நரசிங்கபுரம் ஸ்ரீ பெரியாயி அம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
நரசிங்கபுரம் வசிஷ்டநதி அருகேயுள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரியாயி அம்மன் கோயிலில் அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனா். பூசணிக்காய் பலியிடப்பட்டு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பூசாரி காளீஸ்வரன் செய்திருந்தாா்.