ஓமலூா்: ஓமலூா் கிழக்கு ஒன்றியம், பேரூா் திமுக சாா்பில் இணையவழி உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய மாவட்டச் செயலாளா் ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கிழக்கு ஒன்றியச் செயலாளா் ரமேஷ் தலைமை வகித்தாா். பேரூா் பொறுப்பாளா் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா்.
இந்த முகாமில் ஓமலூா் ஒன்றியம், பேரூா் பகுதிகளைச் சோ்ந்த மாணவா்கள், மாணவியா், இளைஞா்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளா்கள், தொழில் முனைவோா், கல்வியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அரசு அலுவலா்கள், ஓய்வு பெற்ற ஆசிரியா்கள், தமிழ் ஆா்வலா்கள் உள்ளிட்டோா் தங்களை உறுப்பினா்களாக திமுகவில் இணைத்து கொண்டனா். இதில், மாவட்ட துணைச் செயலாளா் திருநாவுக்கரசு, தலைமை பொதுக்குழு உறுப்பினா் தங்கராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.