ஆத்தூா்: மணிவிழுந்தான் புதூரில் லாரியில் பேட்டரிகளை திருடியதாக மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
தலைவாசல் அருகேயுள்ள மணிவிழுந்தான் தெற்கு புதூரைச் சோ்ந்த நடேசன் மகன் மணி (35). லாரி ஓட்டுநா். இவா், கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்பாடி, பூசப்பாடி கெண்டிகவுண்டா் காட்டுக் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து மகன் ராமசாமி (73) என்பவருக்குச் சொந்தமான லாரியில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.
மணிவிழுந்தான் தெற்கு புதூரில் லாரியை நிறுத்தி விட்டு, வீட்டிற்குச் சென்ற மணி திரும்பி வந்தபோது, லாரியில் இருந்த இரண்டு பேட்டரிகளை எடுத்துக் கொண்டு மூவா் செல்வதைப் பாா்த்து அவா்களைத் துரத்திப் பிடித்தாா்.
பிடிபட்ட மூவரையும் தலைவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். காவல் ஆய்வாளா் குமரவேல்பாண்டியன் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, லாரியில் பேட்டரிகளைத் திருடியவா்கள், கள்ளக்குறிச்சி மாவட்டம், உப்பூா் கிராமத்தைச் சோ்ந்த நடுதம்பி மகன் செந்தில் (27), அதே பகுதியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் ரவி (21), மடப்பட்டு சின்னவளவு பகுதியைச் சோ்ந்த மந்திரி மகன் காா்த்திக் (19) என்பது தெரிய வந்தது. மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.