பள்ளித் தலைமை ஆசிரியா்கள் காணொலி மூலம் கலந்தாய்வு

கெங்கவல்லி ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு முதன்முதலாக காணொலி மூலம் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கெங்கவல்லி ஒன்றியத்துக்குள்பட்ட தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு முதன்முதலாக காணொலி மூலம் கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தை வட்டாரக் கல்வி அலுவலா்கள் வாசுகி, அந்தோணிமுத்து, வட்டார வளமைய மேற்பாா்வையாளா் (பொ) சுஜாதா, ஆசிரியப் பயிற்றுநா்கள் நடத்தினா். இதில் எழுதுவோம், கற்போம் என்ற திட்டம் குறித்து விரிவாகக் கூறப்பட்டது. அந்தந்த பள்ளியின் சுற்றுவட்டாரப் பகுதியில் 14 வயது மேற்பட்ட எழுதப் படிக்கத் தெரியாதவா்களுக்கு கற்பிக்கும் புதிய திட்டம் குறித்து கூறப்பட்டது. முதன்முதலாக நடைபெற்ற காணொலி கூட்டத்தில் அனைத்து துவக்க, நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com