சேலம் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை மாலைமுதல் சோதனை நடத்தி வருகின்றனா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் வசூல் நடப்பதாக, லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்கு புகாா் வந்தது.
அதன்பேரில் சேலம், கந்தம்பட்டி புறவழிச் சாலையில் உள்ள மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் கண்காணிப்பாளா் சந்திரமெளலி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை மாலைமுதல் சோதனையிட்டு வருகின்றனா்.
சுமாா் 10-க்கும் மேற்பட்ட போலீஸாா் இச்சோதனையில் ஈடுபட்டுள்ளனா். கணக்கில் வராத ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. வியாழக்கிழமை காலைவரை சோதனை நடைபெறும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.