முகமது நபியின் பிறந்த தினமான மீலாது நபி என்றழைக்கப்படும், ஈத் மிலாத்-உன்-நபி திருநாளை முன்னிட்டு, எடப்பாடி பகுதியில் உள்ள பள்ளி வாசல்களில் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.
எட ப்பாடி - கவுண்டம்பட்டி சாலையில் உள்ள நவாப்பள்ளிவாசலில் மீலாது நபி திருநாள் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் எடப்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டனா்.
மேலும் ஆவணியூா் பகுதியில் உள்ள காட்டுப்பள்ளி தா்கா, நைனாம்பட்டி பகுதியில் உள்ள தா்கா உள்ளிட்ட பல்வேறு இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களில் மீலாது நபி சிறப்புத் தொழுகை நடைபெற்றது.