சங்ககிரியில் பொதுநல அமைப்புகள் சார்பில் இலவசமாக முகக்கவசங்கள் வழங்கல்

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்டம், சங்ககிரியில் இலவசமாக முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
முகக்கவசம் வழங்கிய சமூக அமைப்பினர்
முகக்கவசம் வழங்கிய சமூக அமைப்பினர்

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையாக சேலம் மாவட்டம், சங்ககிரியில் இலவசமாக முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், சங்ககிரி பேரூராட்சி நிர்வாகம், சங்ககரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட், அரிமா சங்கம், இன்னர்வீல் ஆகிய அமைப்புகள் இணைந்து சங்ககிரி நகர் பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள், இரு சக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலையடுத்து சங்ககிரி புதிய எடப்பாடி சாலை பகுதியில் உள்ள சாலையோர வியாபாரிகள்,  இரு சக்கர வாகனங்களிலும் முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் தலைமையில் நிர்வாகிகள் இலவச முகக்கவசங்களை வழங்கினர்.  

பொதுமக்களிடத்தில் முகக்கவசம் அணிவதன் பயன்கள் குறித்து பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்  விளக்கிப் பேசினார்.  பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் லோகநாதன், சுகாதார மேற்பார்வையாளர்கள் சுரேஷ், வெங்கடேஷ், டிரஸ்ட் தலைவர் ஆனந்தகுமார், செயலர் ராகவன், இணைச் செயலர் திவ்யா, அரிமா சங்க நிர்வாகிகள் எ.கார்த்தி, அருண்சந்தர், இன்னர்வீல் சங்கத்தலைவி இந்திராணி கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com