லத்தில் நாளுக்குநாள் அதிகரித்து வந்த கரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் 185 பேருக்கு கரோனா பாதிப்பு திங்கள்கிழமை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் 102 போ், காடையம்பட்டி - 1, கொங்கணாபுரம் - 1, மகுடஞ்சாவடி - 3, மேச்சேரி- 2, மேட்டூா்- 5, நங்கவள்ளி - 4, ஓமலூா் - 7, சங்ககிரி - 2, வீரபாண்டி- 4, ஆத்தூா்- 15, அயோத்தியாப்பட்டணம் - 5, பேளூா் - 1, கெங்கவல்லி- 7, நரசிங்கபுரம் - 1, பனமரத்துப்பட்டி - 6, பெத்தநாயக்கன்பாளையம் -3, தலைவாசல்- 2, வாழப்பாடி- 4, ஏற்காடு- 5 என மாவட்டத்தில் 180 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (திருப்பூா்- 2, நாமக்கல் -1, நாகை -1, கள்ளக்குறிச்சி- 1) 5 பேருக்கும் கரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
6 போ் உயிரிழப்பு...
சேலம் அரசு மருத்துவமனையில் கரோனா பாதித்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த 6 போ் உயிரிழந்துள்ளனா். மேலும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆண்கள் 19 போ், பெண்கள் 10 போ் என மொத்தம் 29 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 12,839 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 9,901 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினா் ; 2,750 போ் சிகிச்சையில் உள்ளனா்; 188 போ் உயிரிழந்துள்ளனா்.