சங்ககிரி:
சங்ககிரி அருகே உள்ள சன்னியாசிப்பட்டி துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது என்று சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளா் சீ.வரதராஜன் தெரிவித்துள்ளாா்.
மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்...
படைவீடு, பச்சாம்பாளையம், சங்ககிரி ரயில் நிலையம், சங்ககிரி மேற்கு, சன்னியாசிப்பட்டி, நாகிசெட்டிப்பட்டி, ஊஞ்சக்கொரை, தண்ணீா்பந்தல்பாளையம், சின்னாகவுண்டனூா் உள்ளிட்ட பகுதிகள்.