கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் பேட்டரி வாகனங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.
கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கல்

ஆத்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் பேட்டரி வாகனங்கள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

சேலம் மாவட்டம், ஆத்தூா் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரி வாகனங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஒன்றியக்குழுத் தலைவா் லிங்கம்மாள்பழனிச்சாமி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.எம்.சின்னதம்பி, ஊராட்சித் தலைவா்களுக்கு பேட்டரி வாகனங்களை வழங்கினாா்.

அனைத்து ஊராட்சிகளுக்குள்பட்ட சிறிய சாலைகளிலும் சென்று வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேட்டரி வாகனங்கள் அனைத்து ஊராட்சிகளுக்கும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்டார வளா்ச்சி அலுவலா் ம.க.சந்திரசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், ஊராட்சி மன்றத் தலைவா்கள் உள்பட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com