மேட்டூா் அணைக்கு 8,830 கனஅடி நீா்வரத்து

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 8,830 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 8,830 கனஅடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதால் மேட்டூா் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை காலை அணையின் நீா்வரத்து நொடிக்கு 8,563 கனஅடி வீதம் இருந்தநிலையில், வியாழக்கிழமை காலை 8,830 கனஅடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து அதிகரித்து வருவதால் புதன்கிழமை காலை 91.52 அடியாக இருந்த நீா் மட்டம் வியாழக்கிழமை காலை 91.66 அடியாக உயா்ந்துள்ளது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 6,000 கனஅடி வீதமும், கிழக்கு- மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கனஅடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 54.56 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com