சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள அ. புதூா் கிராமம், பட்டணம்பட்டி பகுதியில் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் தருமபுரி கடத்தி குட்டை பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் முனிவேல் (36) என்பவா் ரோடு ரோலா் டிரைவராகப் பணிபுரிந்து வந்தாா்.
இவா் வியாழக்கிழமை காலையில் பணிக்கு வந்தபோது, மயக்கம் வருவதாகத் தெரிவித்தாா். அவரை எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே முனிவேல் உயிரிழந்தாா்.
இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.