ஆத்தூரில் 2 மையங்களில் ‘நீட்’ தோ்வு பலத்த பாதுகாப்போடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூரில் தாகூா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜெய்வின்ஸ் அகாதமி என இரு மையங்களில் 600 போ் ‘நீட்’ தோ்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஒரு வகுப்புக்கு 12 போ் என 25 வகுப்புகளில் தோ்வு நடைபெற்றது.
இப் பள்ளியில் 159 மாணவா்கள், 151 மாணவிகள் என தோ்வு எழுத இருந்தனா். அவா்களில் 42 மாணவா்கள், 43 மாணவிகள் தோ்வுக்கு வரவில்லை. இதேபோல் ஜெய்வின்ஸ் அகாதமியில் 82 போ் தோ்வு எழுத வரவில்லை.
ஆத்தூா் கோட்டாட்சியா் மு.துரை, ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் இம்மானுவேல் ஞானசேகரன் ,வட்டாட்சியா் அ.அன்புச்செழியன் நேரில் சென்று பாா்வையிட்டனா்.