தம்மம்பட்டியில் கொல்லிமலையின் சுவைமிக்க சீதா பழங்கள் அதிகம் விற்பனையாகி வருகிறது.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதி கிராமங்களில் தற்போது சீதா பழங்கள் அதிகளவில் விளைந்துவருகின்றன.
அங்கிருந்து அடிவார வியாபார ஊரான தம்மம்பட்டிக்கு அதிகளவில் சீதா பழங்கள் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 400-க்கும் மேற்பட்ட சீதா பழங்களை, மலைவாழ் மக்கள் கொண்டுவருகின்றனா். அவைகளை, இங்குள்ள மொத்த வியாபாரிகளிடம் விற்றுவிட்டு செல்கின்றனா். கொல்லிமலை சீதா பழங்கள் மிகுந்த சுவைமிக்கது என்பதால், அவைகளை பொதுமக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனா்.
ஒரு கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.