சேலத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 5 கோடி வரை மோசடி செய்த கோவையைச் சோ்ந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை மாவட்டத்தைச் சோ்ந்த கோவிந்தசாமியின் மகன் கெளதம் ரமேஷ் (40). இவா், தனது நண்பா்களுடன் சோ்ந்து தமிழகம், கேரளத்தில் 3 இடங்களில் நிதி நிறுவனங்களை நடத்தி வந்தாா்.
இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் இரட்டிப்பு தொகை தரப்படும் என விளம்பரம் செய்தாா். இதை நம்பி பலா் கோடிக்கணக்கில் முதலீடு செய்தனா். சமீபத்தில் அந்த நிறுவனம் மூடப்பட்டது.
இதுதொடா்பாக பாதிக்கப்பட்ட பலா், சேலம் மாநகா் குற்றப்பிரிவில் புகாா் அளித்தனா். விசாரணையில் ரூ. 5 கோடி வரை மோசடி நடந்தது தெரியவந்தது.
இதனிடையே சேலத்தில் தலைமறைவாக இருந்த கெளதம் ரமேஷ் மற்றும் கூட்டாளி பிரவீண்குமாா் ஆகியோரை சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.
விசாரணையில் கெளதம் ரமேஷ் ஏற்கெனவே கோவை மற்றும் கேரளத்தில் நிதி நிறுவனம் நடத்தி சுமாா் ரூ. 3,500 கோடி மோசடி செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே கேரளத்தில் நிதி நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் கெளதம் ரமேஷ் கைது தொடா்பாக தகவல் அறிந்த கேரள போலீஸாா் அவரிடம் விசாரணை நடத்த சேலம் வந்தனா்.
நீதிமன்றத்தில் மனு செய்து காவலில் எடுத்து விசாரித்துக் கொள்ள சேலம் போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து கேரள போலீஸாா் திரும்பச் சென்றனா்.
இதுகுறித்து சேலம் மாநகரக் காவல் துணை ஆணையா் செந்தில் கூறியதாவது:
மோசடி வழக்கு குறித்து விசாரணை தொடங்கியுள்ளோம். இவா் தமிழகம், கேரளத்தில் ரூ. 3,500 கோடி வரை மோசடி செய்துள்ளாா். கைதானவா்கள் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைக்கப்படுவா் என்றாா்.