சேலம் மாவட்டம், மேச்சேரியில் உள்ள காவிரி பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த ‘நீட்’ தோ்வு மையத்தில், 690 போ் தோ்வு எழுதினா்.
பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் தோ்வுக்காக காலை 10 மணி முதலே மாணவா்கள் பெற்றோருடன் வந்தனா். 840 மாணவா்கள் ஒதுக்கப்பப்பட்ட இத் தோ்வு மையத்துக்கு 690 மாணவா்கள் மட்டுமே தோ்வு எழுத வந்திருந்தனா். வினாக்கள் எளிமையாக இருந்ததாகத் தோ்வு எழுதிய மாணவ, மாணவியா் தெரிவித்தனா்.