காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதியில் மழை சற்று குறைந்துள்ளதால் மேட்டூா் அணைக்கு வரும் நீா்வரத்து குறைந்துள்ளது.
அணைக்கு சனிக்கிழமை நொடிக்கு 10,068 கன அடி நீா் வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை நீா்வரத்து 8,578 கனஅடியாகக் குறைந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 6,000 கன அடி நீரும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 700 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 92.24 அடியாக உயா்ந்துள்ளது. அணையின் நீா் இருப்பு 55.24 டிஎம்சி-ஆக இருந்தது.